Saturday, July 2, 2016

நீ என்ன பாரதி கண்ட புதுமைப்பெண்ணா !!



ரே ரே ரே ரஃபுதார்.. ரே ரே ரே..” என்று போன் அலறியது. Displayவில் ஜானகி அம்மா சிரித்துக்கொண்டிருந்தார்.

ஹலோ..

நேத்திரா, என்ன தூக்கமா

ம்ம்.. எப்படிமா ஒரே ஹலோவுல நா என்ன பண்ணுறேன்னு கண்டுபிடிக்குற..

நாளைக்கு வீட்டுக்கு வந்ததும் சொல்லுறேன். தைரியா கிண்டி வந்துட்டான். அவனுக்கு கால் பண்ணி நம்ம வீட்டுக்கு வர வழி சொல்லு

மா.. GPS use பண்ணி வந்துடலாம்மா.. மாமாதான் US-ஸில் இருந்தாருன்னு சொன்னே. இது கூடவா தெரியாது

அவனுக்கு இதுயெல்லாம் தெரியும தெரியாதானு எனக்கு தெரியாது..

அம்மவிடம் பேசும் போது மாமாவிடம் இருந்து 2nd call வந்தது. 

தைரியநாதன் அம்மாவின் தம்பி, எனக்கு மாமா. மத்திய அரசுல வேலைப்பார்த்தார். ஏதோ பெரிய அதிகாரியாம். அவரு பையன், மஞ்சு என்ற மஞ்சுநாத். அவன் அமெரிக்காவில் settle ஆனா பின் மாமா விருப்ப ஒய்வுப்பெற்று கலிபோர்னியாவில் ஆறு மாசம், பெங்களுரில் ஆறு மாசமுன்னு இருப்பார். எனக்கு மஞ்சுவை கல்யாணம் கட்டிக்கொடுக்க வேண்டும் என்று சில காலமாக அம்மா சூசகமா சொல்லிகிட்டுவறாங்க. எப்போதும் சதாப்தியில் வரும் மாமாவும் அத்தையும் இந்த தடவை காரில் வறாங்க. 

ரு வழியா போனில் directions கொடுத்து அவர்கள் வீட்டுக்கு வந்தார்கள். வந்த வேகத்தில் மாமா, “என்ன apartment இது godown மாதிரி இருக்கு, அந்த பழைய வீடே தேவல. I don’t like it

வீட்ட மாத்தும்போது என் கிட்ட செல்லியிருந்தா என் தம்பிகிட்ட சொல்லி சோழிங்கநல்லூர்ல..” என்று சொல்லிக்கொண்டிருந்த அத்தையை மடக்கினர் மாமா.

ஹும் உன் தம்பியா.. பெரிய தம்பி.. நம்ம சென்னைக்கு வாரோமுன்னு தெரிஞ்சும் ஊட்டிக்கு outing போயிட்டான். Useless fellow.

அவன் என்ன பண்ணுவான் அவனுக்கு மூணு நாள் செர்ந்து லீவு வரதே கஷ்ட்..

மாமா அத்தை சொல்வதை காதில் வாங்காமல் என்னைப்பார்த்து, “அவன்தான் அப்படி.. உங்க அம்மாவுக்கு அப்படி என்ன வேலை..

நான் பதில் சொல்லும் முன் அத்தை குறுக்கிட்டு, “அதுதான் election duty இருக்குனு போன்லியே ஜானகி சொல்லிட்டாளே

இப்படிதான் அவர்களே கேள்விக்கேட்டு அவர்களே பதில் சொல்லிப்பாங்க. எனக்கு அம்மா வழி சொந்தம் என்றாலே அலர்ஜி. இப்பேல்லாம் அமெரிக்கா பீத்தல் வேற.

Trainலில் வந்திருக்கலாமே மாமா ?

அமெரிக்கவுல long drive போய் பழகிடுச்சு. பெங்களுர் டூ சென்னையெல்லாம் ஒரு தூரமே இல்ல

வழக்கம்போல எல்லா பெங்களுர் வாசிகள் போல சென்னை வெயிலை கடித்துக்கொண்டார்கள். 

சரி, நாளைக்கு காலையில் மகாபலிபுரம் போவோம். வரும்போது சாய்ந்திரம் திருவல்லிகேணி, மையிலாபூர், வடபழனி கோயிலுக்கு போகலாம். என்ன Nathan ப்ளான் எப்படி?

அத்த Nathanஆ?

ஆமாம், அமெரிகாவில் இவரு பேரு நாதன் இல்ல Nathan..

“ஹி ஹி ஹி… “ என்று அசட்டு சிரிப்பு சிரித்துவிட்டு மாமா தொடர்ந்தார், “Perfect plan. கால ஒன்பது மணிக்கு கிளம்பலாம். What you say Nethra ?

மாமா நாளைக்கு எலக்‌ஷன்… நான் வோட்டு போட போகணும்

ம்ம்ம் ஏதோ உன் ஒரு வோட்டுல தான் யாரோ ஆட்சிய பிடிப்பாங்க போல!!” என்றாள் அத்தை.

மாமா, “கருணாநிதியோ ஜெயலலிதாவோ யாரோ ஒருத்தர்தான் வருவாங்க. What is the big deal!

“இல்ல மாமா எட்டு மணிக்கு போலிங் ஆரம்பிச்சிடும். பக்கத்து ஸ்கூல்லதான் பூத்…

என்னமோ பண்ணு..”

இரவேல்லாம் இப்படியே questions and suggestionsசாகவே இருந்தது. அம்மா சொன்னாங்கனு எல்லாத்தையும் கேட்டுட்டு இருந்தேன். 
--


விடிந்தது வாக்களித்துவிட்டு வந்தேன். மாமாவும் அத்தையும் பார்கிங்கில் readyயா இருந்தனர்.

யாருக்கு வோட்டு போட்ட நேத்திரா”.

அத்தை, “சொல்லாத சொல்லாத. Nathan this is secret”.

அடுத்த அமேரிக்க பீத்தல்- ”என்ன secret. சரி எனக்கு left-hand drive பண்ணி பழகிடுச்சு. உங்க ஊர் trafficகில் நீயே வண்டிய ஓட்டு” என்று சொல்லி என்னிடம் சாவியை குடுத்தார்.

மகாபலிபுரம் எவ்வளவு தடவ பார்த்திருந்தாலும் எதாவது reason சொல்லி கால்ல ரெக்கையக் கட்டிட்டு இவங்களுக்கு எங்கயாவது சுத்தணும். இப்போ புதுசா வாங்கிய DSLR-ரை test பண்ணாணும். வழியேங்கும் அமேரிக்க, DSLR, மஞ்சு, Heathrow airport என்று கதைகள் சொல்லிக்கொண்டுவந்தனர்.

ந்து மணிக்கு மீண்டும் சென்னை. முதலில் திருவல்லிகேணி. கோயிலுக்குள் நுழைந்ததும் மாமா, “எவ்வளவுதான் நாம வேளியில சுத்தினாலும் கோவிலுக்குள்ள வந்த ஒரு அமைதி”.

அது அவங்க அவங்க மனசு பொருத்தது” என்றேன்.

இருந்தாலும் temple is special. Don’t compare it with others

ஒரே எண்ணம் இருக்குறவங்க ஒரு எடத்துல ஒண்ணாயிருந்த அங்க ஒரு positive force இருக்கும். உதாரணத்துக்கு சினிமா தியேட்டர். So எண்ணம்தான் முக்கி..”

கோவிலும் சினிமாவும் ஒண்ணா. இது நம்ம கலாசாரம்

சினிமாவும் நம்ம கலாசாரத்துல இப்போ ஒண்ணாயிடுச்சு மாமா

உங்க வாதத்தை வீட்டுல போய் வெச்சிக்கலாம். போசாம வாங்க” என்றாள் அத்தை.


டைசியாக வடபழனி கோயில். அன்னிக்கு ஏதோ விஷேசம் போல. பல்லாகுல சாமி சிலைய தூக்கிட்டு கோயில சுத்தி வந்தாங்க. 

ஆஹா என்ன தரிசனம்” என்று கூறி அத்தை கன்னத்தில் போட்டுக்கொண்டாள். எனக்கு பல்லாக்கு தூக்குபவர்களைப் பார்த்ததும் பரிதாபமாக இருந்தது. சாமி சிலையுடன் ஒரு ஆசாமியும் மேலே இருந்தார்.

கோயிலை மூன்று முறை சுற்றினார்கள். என்னையும் கூட சுற்ற சொன்னார்கள்.

இவ்வளவு கஷ்டப்பட்டு பல்லாக்க எதுக்கு தூக்கணும்” என்றேன்.

மாமா, “சாமிக்கு செய்யணும்னா புண்ணியம் பண்ணியிருக்கணும்

இதுல பாவம் புண்ணியம் எங்க இருந்து வருது. சாமி சிலைய விட ஆசாமிதான் weight-அ இருக்கார்

மாமாவின் முகம் மாறியது, “ஒழுங்க இன்ஜினியரிங் இல்ல கம்பூய்ட்டர்ஸ் படிச்சுட்டு இந்நேரம் அமேரிக்கவுல இருந்திருக்கலாம். அதவிட்டு English literature, journalismனு கண்ட புக்ஸ் படிச்சி உன் அப்பா புத்தி அப்பாடியே..” என்று கூறிமுடிப்பதற்குள் அத்தை குறுக்கிட்டாள்.

இவளுக்கு என்ன தெரியும் சின்ன பெண்ணு

காரை எடுக்க சென்றோம். எப்போதும் பேசிக்கொண்டே இருக்கும் மாமா silentஆக வந்தார். 

காரில் அமர்ந்தபின் மாமா, “நீ என்ன பாரதி கண்ட புதுமைப்பெண்ணா !!”.

இப்போவறைக்கும் இல்ல. ஆனா இருந்த என்ன தப்பு”.

இல்ல… அவரு மாதிரி எதாவது புரட்சி பண்ணப்போறிய

அவரு என்ன புரட்சி பண்ணாரு ?

கொஞ்சம் யோசித்தவர், “அதுதான்.. பாட்டு எழுதினாரு.. கதை எழுதினாரு.. அப்புறம் செரியில் இருக்குறவங்களுக்கு பூணல் போட்டாறு..

அதுக்கு பதில, அவரு வீட்டுப்பக்கதுல இருக்கும் பசங்களை பிடிச்சி சாக்கடை அள்ள வெச்சிருக்கலாம். அது இத விட புரட்சியாயிருக்கும்” என்றேன்.

இதை கேட்டதும் பின் சீட்டில் இருந்த அத்தை “what tha..” என்று கூறி நிருத்திக்கொண்டாள்.

மாமா, “நீ உங்கப்பனேதான்”.

காரை சரவண பவன் பார்கிங்கில் நிறுத்தினேன். யாரும் இறங்கவில்லை.

மாமா, “நீ சரிப்பட்டு வரமாட்டே. மஞ்சுவுக்கு வே..”

வழக்கம்போல் அத்தை குறுக்கிட்டு, “Nathan, என்ன சொல்லணுமோ ஜானகி கிட்ட சொல்லுங்க

மூன்று பேரும் இறங்கி ஓட்டலுக்குள் சென்றோம்.

---


***Above art work is also by the blogger

No comments:

Post a Comment