Monday, August 1, 2016

ஜிம்மியின் சொர்கம் எப்படி இருக்கும்?



ஆயத்தமின்றி கிறுக்கிய வரிகள் சில.

**1**

டேய் செவ்வாய்கிழமை ஏண்டா முடி வெட்டிக்கபோற என்று நண்பன் கேட்டதும் அம்மாவின் நியாபகம் வந்தது. 

**2**

வாத்து முட்டை போட்டால் ஆம்லேட் செய்யலாம் என்று காத்திருந்த போது, வாத்து பொன் முட்டையிட்டது. சா ஆம்லேட் போச்சே :-(

**3**

மளிகை கடையில்,
-வேற என்ன வேணும் சாமி என்றார் கடைக்காரர்
-சாதார்ணமா கூப்பிடுங்க என்றான்
-ஹி ஹி அப்படியே பழகிடுச்சி என்றார் சிரித்துக்கோண்டே

**4**

சாமி கும்பிட்டா சொர்கத்துக்கு போகலாம் என்ற அம்மாவிடம். ஜிம்மியும் (நாய்) நம்ம கூட வருமாமா என கேட்டது குழந்தை.

**5**

சவக்கிடங்கில்,

-அனாத பொணம்.. செத்து ரெண்டு மூணு நாள் இருக்கும் போல..
ஒரு வாரமாச்சிடா என்று மனதிற்குள் நினைத்தது பிணம்

****

**Above illustration along with the post is by the blogger



No comments:

Post a Comment