Saturday, January 28, 2017

காட்சிகள் மாறினாலும் climax மாறவில்லை

15 வருடங்கள் பின் நோக்கி செல்லவும். Flashback

முன்னாள் முதல் அமைச்சருக்கு ஏதோ ஒரு வழக்கில் அவருக்கு எதிராக தீர்ப்பு வந்ததனால் கலவரம் நடக்க வாய்புள்ளது. ஆகையால் கல்லூரிக்கு விடுமுறை அளித்து எங்களை வீட்டுக்குப் போக சென்னதாக circularரை படித்த தமிழ் ஐயா கூறியதும் வகுப்பில் ஓஓஒவென்று சத்தம். நீங்க எல்லாம் மாணவர்களா என்று அவர் திட்டியதை காதில் வாங்காமல் வகுப்பைவிட்டு வெளியேரினோம்.

மதியம் சாப்பிட்டு ரூமில் ரம்மியாடும் போது, காலேஜ் பஸ் ஒன்றை யாரோ எரித்ததாகவும், அதில் சில மாணவர்கள் இறந்துவிட்டதாகவும் ஒரு நண்பன் வந்து சென்னான். சம்பவம் நடந்த இடத்தருகில் அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் மறியல் போராட்டத்தில் இருப்பதாக சென்னான்.

சிறிது நேரத்தில் நாங்கள் ( ரூமில் இருந்த 5 பேர்) போராட்ட இடத்துக்கு சென்றோம். அங்கே எங்க காலேஜ் சீனியர்கள் யாருமில்லை, கலைக் கல்லூரி பசங்க கூட்டம் ரோட்டை மறிச்சி சாலை மறியலில் ஈடுபட்டனர். ஒரு 200 பேர். NH 7ல் டிராஃபிக் ஸ்தம்பித்தது. நாங்கள் ஐவரும் நடு கூட்டத்துக்கே சென்றுவிட்டோம். அங்கும் மாணவர்கள் கலெக்டரிடம் (கண்டிப்ப்பாக அவர் வடநாட்டவர்) வாக்குவதத்தில் இருந்தனர். எங்களுகும் அவருக்கும் ஒரு 10 அடி இடைவெளிதான் இருக்கும்.

“LK Advani இங்கு வரவேண்டும். Karunanidhi இங்கு வரவேண்டும்”, “நீதி வேண்டும்” போன்ற கோஷங்கள் வந்தது. சிலர் சட்டைகளை கழட்டி ரோட்டில் உட்கார்ந்தனர்.

கலெக்டர் வண்டியின் பின் சில போலீஸார் இருந்தனர். அவர்கள் அருகில் ஒரு போலீஸ் வேன், கொஞ்ச தூரம் தள்ளி நிறைய காகிகள். அரைமணி நேரம் கூச்சல், குழப்பம். 

தீடிர்னு யாரோ CHARGEனு கத்த, ஒரு போலீஸ் குழு கலேக்டரை சுற்றி வளைத்து அரண் அமைத்தனர், மற்ற போலிசார் லத்தியால் மாணவர்களை “minimum force” கொடுத்து அடித்தனர். எறும்பு கூட்டத்தில் நீர் விழுந்தால் எப்படி எறும்புகள் சிதரி ஓடுமோ, அப்படி நாங்கள் ஓடினோம். நான் செய்வதரியாமல் reverseஆக ஓடினேன். கலேக்டருக்கு அரண் அமைத்தது, வேனில் இருந்த போலிஸார் கீழே குதித்து ஓடி வந்தது என்று எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டே ஓடினேன். இவை எல்லாம் சில secondsல் நடந்தது.

திரும்பி ஒழுங்காக ஓட வேண்டும் என்று எனக்கு தோன்றவேயில்லை. Reverseஆக ஓடியதில் ஒரு காலில் உள்ள செருப்பு காலை விட்டு பறந்தது. சுதாரித்துக்கொண்டு இன்னோரு செருப்பையும் வீசிவிட்டு திரும்பி correctஆக ஓடுவதற்க்குள் ஒரு போலீஸ்கர் அருகில் வந்துவிட்டார். ஒரு அடி இடது கால் பின் தோடையில் ஷாக் அடிச்ச மாதிரி விழுந்தது. திரும்பி பார்த்துக்கொண்டே ஓடினேன், அவர் முகத்தில் ஒரு வெறி, அடுத்த வேளாசல் லத்தி 3D effect மாதிரி முன்னால் வந்து சென்றது. மூன்றாவது வேளாசல் வருவதற்குள் ஓட்டத்தை அதிகப்படுத்தினேன், ஆனாலும் லத்தி லேசாக பின்னம் முட்டியை முத்தமிட்டு சென்றது.

கூட்டம் அருகில் இருந்த குறுக்கு தெருவுகளுக்குள் சென்றதால், போலிஸ்காரர்கள் எங்களை பின்தோடர்ந்து வருவதை நிறுத்தினர். மெயின் ரோட்டுக்கு சென்றால் மீண்டு அடி விழும் அப்புறமா போலீஸ் புடிச்சிட்டு போயிடுவாங்க என்று அங்குள்ள வீடுகளில் இருந்தவர்கள் எங்களுக்கு எச்சாரித்தனர். சந்து, குறுக்கு சந்து, மூத்திர சந்துகள் வழியாக, பல வீடுகளின் compoundகளை குதித்து, ஐந்து கி.மிட்டர்கள் சுற்றி இரவு ரூமுக்கு வந்தோம்.

அடுத்த நாள் எல்லாவற்றையும் கண்டித்து அமைதியான மவுன ஊர்வலம் நடத்துனோம். 

-அந்த முன்னாள் முதல்வர் அடுத்து ஆண்டு வந்த பொதுத்தேர்தலில் வெற்றி பெற்று முதல்வரானார்.

காட்சிகள் மாறினாலும் climax மாறவில்லை.


No comments:

Post a Comment