Sunday, August 2, 2015

பாகுபலியும் சினிமாவின் விதிகளும்.



Epic, காவியம், இந்திய சினிமாவின் உச்சம் என்று பலரும் போற்றும் ஒரு படம் எப்படி எந்த விதத்திலும் சினிமாவின் புளித்துப்போன விதிகளை மீறாமல் எடுக்கப்பட்ட படமாக இருக்கும் ? மேலும் இதில் பல முரண்கள். Fantasy என்ற வகையில் (genre) ஒளிந்துக்கொண்டு சப்பைகட்டு வேறு. படம் வந்து பல வாரம் ஆவுது இபோ எழுதுற? எனக்கு நேரம் கிடைத்தால்தான் எழுத முடியும்!!

1. ஒரே ஒடத்தில் மிகப்பெரிய அருவி, பனி மலை, பொட்டல் காடு, மாநகரம்.. என்று வினோதமான நிலப்பரப்புகள் கொண்டப்படம். 

2. ஆற்றில் வரும் குழந்தை எப்போதும் குழந்தையில்லாத தம்பதிகளிடமே வந்து சேரும். சினிமாவின் விதி.

3. பெரிய அருவியில் இருந்து குதித்தால் நம்ம ஹீரோவுக்கு ஒரு சின்ன கீறல் கூட விழாது. சினிமாவின் விதி.

4. சிவு அவந்திகாவுக்கு பெண்மையை உணர்த்துவார். எல்லா படத்துலயும் நம்ம ஹீரோவோட முதல் வேலை இதுதான். சினிமாவின் விதி.

5. மயிலாட்டம், கரகாட்டம், பரதம், செண்டமேளம், நாதஸ்வரம், தவில், ஆப்பிரிக்க பழங்குடி டான்ஸ், item dance என்று எல்லாவிதமான கலைகளும் உள்ளடக்கிய படம்.

6. 100அடி சிலைய செதுக்கிட்டு அப்புறம் தூக்கி நிறுத்துவாங்க. வடிவேலு விழுதுகள் plan.

7. அப்பா ஹீரோவும் மகன் ஹீரோவும் ஒரே மாதிரிதான் இருப்பங்க. சினிமாவின் விதி.

8. அம்மாவும் பிள்ளையும் (ஹீரோ) பிரிந்தால் 25 வருஷம் கழித்து கண்டிப்பா ஒண்ணுசேருவாங்க. சினிமாவின் விதி.

9. ராஜா ராணி படமென்றால் ஒரு character பெயர் “மார்தாண்டன்” என்று கண்டிப்பா உண்டு. சினிமாவின் விதி.

10. மூன்று பெண்களோடு ஒரு குத்தாட்டம் போடலேனா தெலுங்கு பட ஹீரோக்களுக்கு தூக்கமேவராதே! சினிமாவின் விதி.

11. அது எப்படி அந்த ஒற்றன் மலையில் இருந்து குதிப்பான் என்று பாகுபலிக்கு தெரியும். Readyய கயிரோட வராரு!

12. நாட்டின் பெயர்கள், characters பெயர்கள், படத்தில் வரும் கலைகள், நிலப்பரப்பு என்று எதிலும் sync இல்லாத படம்.

13. காளகேயர்கள்-தான் பாகுபலி படத்தின் comedy-யர்கள்.

14. காட்டுமிராண்டிகள் கருப்பாதான் இருப்பாங்களா? சினிமாவின் விதி.

15. போர்களத்தில் (சண்டைக்காட்சி) ஒரு சிறு பிள்ளையை காப்பாற்றுவது கலாகலத்துக்கு நம்ம ஹீரோக்கள் செய்யும் ஒரு சமுதாய சேவை. சினிமாவின் விதி.

கடைசியில் ஒரு போரை அக்கப்போர் ஆக்கியதுதான் மிச்சம்.


No comments:

Post a Comment