Friday, October 23, 2015

சார் நீங்க என்ன ஜாதி ?



சமீபத்தில் மத்திய அரசு அலுவலகத்தில் வேலை செய்யும் ஒரு உறவினருடன் பேசும்போது அவர் தன்னுடன் பணியாற்றும் அனைவரையும் அவர்களின் சாதியின் பெயரைக் கூறிப்பிட்டுப் பேசினார். சம்பந்தமே இல்லாமல் இவர் எதற்கு சாதியை இழுக்கிறார் என்று நினைத்தேன். உறவினர் என்பதால் நான் அதற்கு எதிர்வினைக் கூற முயலவில்லை. 

வேறு பல சந்தர்பங்களில் நான் தெரிந்துக்கொண்டது- அரசு வேலையில் இருப்பவர்கள் அனேகமாக தங்களுடன் பணிபுறியும் சக ஊழியர்கள் எந்த எந்த சாதியினர் என்பதை அறிந்து அதற்கு எற்றாற்போல் செயல் படுகின்றார்கள்.

அரசுத்துறை இப்படி இருக்க தனியார் மட்டும் என்ன விதிவிலக்கா? சாதி வாரியான இட ஒதுக்கீடு இல்லையே தவிர சிலர் மனதில் சாதியையும் மதத்தையும் சுமந்துக்கொண்டு தான் இருக்கின்றார்கள்.

நான் கேட்ட சில “சாதி” ரிதியான வாக்கியங்கள்,

“..அவளுக்கு என்ன __ராச்சே. எங்க போனாலும் பொழச்சிப” 

“..இந்த __ பயலுங்களே இப்படித்தான்”

இப்படி சாதியை மேற்கொள் காட்டி ஒருவரின் character-ரை தீர்மானிக்கின்றனர். அரசுத்துறையில்லாவது application form முதல் எல்லா bio-date/profile formகளில் சாதியை கூறிப்பிடவேண்டும். ஆனால் தனியார்துறையில் அப்படி இல்லை. இப்படி இருக்கையில் எப்படி எப்படியோ துருவி அடுத்தவனின் சாதியை கண்டுபிடிக்கும் சகாக்களே வாங்குற சம்பளத்துக்கு கொஞ்சமாவது வேலை செய்க!!

Above picture by the blogger for illustration purpose only :-)


No comments:

Post a Comment